Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓபிஎஸ் அணியினரை கூண்டோடு நீக்கிய எடப்பாடி...அதிமுகவில் பரபரப்பு..!

madhankumar July 14, 2022 & 18:30 [IST]
ஓபிஎஸ் அணியினரை கூண்டோடு நீக்கிய எடப்பாடி...அதிமுகவில் பரபரப்பு..!Representative Image.

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனையை அடுத்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் அணியினரை ஒதுக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியில் இருந்து ஓபிஎஸை விலகுவதாக அறிவித்தார். 

அதன்பின்னர் நான் உன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவே எடப்பாடியை அதிமுகவில் இருந்து நீக்குகிறேன் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் அனைவரையும் நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் உட்பட 18 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்புகள் வைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்