அதிமுக பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் எதுவும் செல்லாது என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் இருவரும் ஒருங்கிணைந்து சசிகலா மற்றும் தினகரணையும் இணைத்துக் கொள்வோம் என பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து, ஓபிஎஸ் அழைப்பை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, “ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட்டு முடிவு செய்து விட முடியாது. அரசியல் கட்சியை பொறுத்தவரை கட்சியை வழி நடத்துவது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தான். ஒற்றை தலைமை கொள்கையில் அதிமுகவினர் கருத்தில் மாற்றமில்லை” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…