Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Politics : பரபரப்பு.. பதவி விலகிய முதல்வர்..?

Muthu Kumar May 14, 2022 & 17:17 [IST]
Politics : பரபரப்பு.. பதவி விலகிய முதல்வர்..?Representative Image.

Politics : பாஜக ஆளும் மாநிலமான திரிபுராவின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பாஜக ஆளும் மாநிலமான திரிபுராவின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் சற்றுமுன்னர் திரிபுரா ஆளுநரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தை ஆளுநர் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதிய முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் 16 இடங்களை மட்டுமே பெற்றது தோற்றது.

திரிபுராவின் முதலமைச்சர் பிப்லப் குமார் பதவி விலகியது சர்சைக்குரிய முடிவு எனவும் என பிப்லப் குமார் மீது MLAக்கள் அதிருப்தி எனவும் தகவல் வெளியானது. 

திரிபுராவில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்