Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Baskaran Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்Representative Image.

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகின்ற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் 17மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அவரை அதிகாலையில் கைது செய்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரை அதிகாரிகள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்குச் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்