Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pakistan Latest News : அதிர்ச்சி... குழந்தையின் தலையை துண்டித்த ஊழியர்கள்..?

Muthu Kumar June 21, 2022 & 17:35 [IST]
Pakistan Latest News : அதிர்ச்சி... குழந்தையின் தலையை துண்டித்த ஊழியர்கள்..? Representative Image.

Pakistan Latest News : பாகிஸ்தானில் பிரசவத்திற்கு சென்ற இளம்பெண்ணுக்கு அனுபவம் இல்லாத மருத்துவ ஊழியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் குழந்தை தலை தனியாக துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தார்பார்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். அங்கு பெண் மகப்பெறு மருத்துவர் இல்லாததால் அனுபவம் இல்லாத மருத்துவ ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர்.

இந்நிலையில், அறுவை சிகிச்சையின் போது மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் தலை துண்டாகியுள்ளது. இதையடுத்து குழந்தையின் தலையை பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டு அனுப்பியுள்ளனர். 

இதனால், பெண்ணின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. இதனையடுத்து,  லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தலையை வெளியே எடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஆரம்ப சுகாதார ஊழியர்களின் இந்த அலட்சியத்தால் குழந்தையின் உயிர் பலியானது. இதுகுறித்து உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சிந்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்