Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நளினிக்கு 7வது முறையாக பரோல் நீட்டிப்பு...! தமிழக அரசு உத்தரவு...!

Muthu Kumar July 26, 2022 & 13:45 [IST]
நளினிக்கு 7வது முறையாக பரோல் நீட்டிப்பு...! தமிழக அரசு உத்தரவு...!Representative Image.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், நளினியின் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் முறையாக 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். 

இதனையடுத்து, தொடர்ச்சியாக 6 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட  இன்று ஜெயிலுக்கு திரும்பும் நிலையில், நளினியின் தாயார் பத்மா தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு நளினிக்கு 7-வது முறையாக 30 நாட்கள் பரோல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்