2021 - 2022ம் நிதியாண்டிற்கு வருமானவரி செலுத்துவதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்நிலையில், வரி செலுத்துபவர்களை வருமானவரி தாக்கல் செய்யுமாறு வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வருடத்திற்க்கு 2.5 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த மாதம் 31ம் தேதிக்குள் வருமானவரி அபராதமின்றி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஜூலை மாதத்திற்கு பின் வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஆண்டுக்கு 5 லட்சத்திற்குள் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் 5 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் டிசம்பர் வரை 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஜனவரியிலிருந்து மார்ச் மாதத்திற்குள் செலுத்தினார் 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023மார்ச் மாதத்திற்கு பிறகு வருமானவரி தாக்கல் செய்ய முடியாது என வருமானவரித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…