Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொங்கல் முடிந்த பிறகும் வாங்கிக்கலாம்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!

Sekar Updated:
பொங்கல் முடிந்த பிறகும் வாங்கிக்கலாம்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!Representative Image.

தமிழக மக்கள் பொங்கல் முடிந்த பின்னரும் அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பச்சரிசி மற்றும் சர்க்கரை தலா ஒரு கிலோவும், ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கலுக்கு தேவையான இதர பொருட்களை வாங்கிக்கொள்வதற்கு எதுவாக ரூ.1,000 பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த பரிசு தொகுப்பு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுத்தொகுப்பை பெறுவதற்கு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்றுடன் டோக்கன் வழங்கும் பணி முடிவடைய உள்ள நிலையில், நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்க உள்ளார். அதையடுத்து ஜனவரி 13 ஆம் தேதி வரை அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 

இந்நிலையில், மேலே குறிப்பிட்ட தேதிகளில் தங்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியாதவர்கள், பொங்கல் முடிந்த பிறகு ஜனவரி 16 ஆம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்