Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..இடி, மின்னலுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை..!

madhankumar June 19, 2022 & 17:26 [IST]
17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..இடி, மின்னலுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை..!Representative Image.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் 17 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை,தேனி,திண்டுக்கல்,திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,வேலூர் உட்பட 17  மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வரும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் மலை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி,கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள்,மத்திய கிழக்கு அரபிக்கடல்,இலட்சத்தீவு ஆகியபகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என எச்சரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்