Assam Latest News : அசாம் மாநிலத்தில் விசாரணை கைதி உயிரிழந்ததால் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் பதாத்ரபா பகுதியை சேர்ந்த மீனவர் சபிகுல் இஸ்லாம் என்பவர் ஒரு வழக்கில் விசாரணை கைதியாக பதாத்ரபா காவல்நிலைய போலீஸார் அழைத்து சென்றனர். அங்கு நடைபெற்ற போலீசாரின் தீவிர விசாரணையில், சபிகுல் இஸ்லாம் உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பதாத்ரபா காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண்கள் உட்பட 20 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…