Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் கொலை...? காதலனிடம் விசாரணை..!

madhankumar June 20, 2022 & 16:52 [IST]
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் கொலை...? காதலனிடம் விசாரணை..!Representative Image.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹரிஷ் வயது 48 இவர் மருத்துவத்துறையில் பணியாடிவருகிறார். இந்நிலையில் இவருக்கு பேஸ் புக் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியை சேர்ந்த ரைசல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

இதனையடுத்து ரைசல் தனது காதலனை பார்க்க கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு வந்தார், அங்கு வைத்து இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.பின்னர் இருவரும் பெங்களுருவில் வைத்து தங்களது திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். அப்போது ரைசல் எர்ணாகுளத்தில் உள்ள தனது கணவரின் சொந்த வீட்டிற்கு செல்லலாம் என கோரியுள்ளார். அதற்கு சரி என கூறியா ஹரிஷ் பெங்களுருவில் இருந்து சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளனர்.

அப்போது ரயில் ஓமலூர் அருகே வந்தபோது படியில் நின்றுகொண்டிருந்த ரைசல் 50 பள்ளத்தில் விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரது கணவர் ஹாரிஸ், அடுத்த வந்த ரெயில் நிறுத்தமான ஓமலூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ரைசல் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த போலீசார் ரைசல் ரயிலில் இருந்து விழுந்து இறந்ததால் தருமபுரி ரயில்வே பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் மற்றும் போலீசார், ரைசல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில் ஹரிஷ் ரைசலை எர்ணாகுளத்தில் உள்ள தனது பெற்றோர் முன்னிலையில் வைத்து திருமணம் செய்யவில்லை. மேலும் கேரளாவில் வைத்து பதிவு திருமணம் செய்யாமல் பெங்களுருவில் வைத்து ரகசிய திருமணம் செய்துள்ளார். மேலும் எர்ணாகுளத்தில் சொந்த வீடு இருந்தபோது பெங்களுருவில் வைத்து குடும்பம் நடத்தியது ஏன்? என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும்  ரைசல் தனது கணவரின் பெற்றோரை பார்க்கவேண்டும் என பலமுறை கூறியும் அளித்து செல்லாமல் ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்காமல் அழைத்து சென்றுள்ளார். அப்படி செல்லும் பொது தான் திருமணம் செய்துகொண்ட செய்தி வீட்டிற்கு தெரிந்துவிடுமோ என அஞ்சி ரைசலை ரயிலில் இருந்து தள்ளிவிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து ரயில்வே போலீசார் ஹாரிஸை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தான் காதலித்து திருமணம் செய்த கணவரின் வீட்டிற்கு செல்லும்போது ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்