தமிழ்நாடு திமுகவின் கோட்டை எனவும் கோட்டை கனவை இனி எடப்பாடி பழனிச்சாமி காண வேண்டாம் என டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.ஆர் பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அதிமுகவில் உள்ள தெருச் சண்டையை மறந்து திமுக மீது எடப்பாடி பழனிசாமி பாய்கிறார் என்று சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்றுவிட்டு சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றது போல் மற்ற மாவட்டத்தில் வென்று இருந்தால் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும்” என கூறியுள்ளார்.
இதனையடுத்து, “சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணை கவ்வியது என்பதை அவர் மறந்துவிட்டார். திமுக சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் கோட்டையாக உள்ளது என்றும் எடப்பாடிபழனிசாமி இனி கோட்டை கனவு காண வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், டிஆர் பாலுவின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…