Trending News : உலகம் முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரையும் சீரழித்து வருகிறது. இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு கடனாளியாகும் பலர் தற்கொலை செய்து வருகிறார்கள்.
அதன்படி, அம்பத்தூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணகுமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருமானத்தை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இளம் பல காவலர்கள் ஆன்லைன் ரம்மி மோகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டில் இருந்து போலீஸ்காரர்களை மீட்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி, காவலர்களை ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து மீட்க நடத்தும் முகாமின் முதல் பயிற்சி வகுப்பு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. இந்த பய்ற்சி வகுப்பில் 150 காவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்ட காவலர்களிடம் “கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் உங்கள் பணத்தை இந்த செயலியின் மூலம் இழக்காதீர்கள்” என வலியுறுத்தி வருகிறார்கள்.
அதேபோல், இந்த பயிற்சி முகாமில் பொருளாதார நிபுணர்கள் மற்றும் பேராசிரியர் நரேந்திரா ஆகியோர் பணத்தை சேமிக்கும் வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தனர். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாமல் தங்கள் கவனத்தை நல்ல வழிகளில் திசை திருப்புவது பற்றியும் தொடர்ந்து பல 'பேட்ச்' மூலம் இந்த பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…