உத்திரபிரதேசத்தில் இரண்டாம் வாய்ப்பாடு சொல்லாத காரணத்தால் 9 வயது சிறுவனின் கையில் துளையிடும் இயந்திரம் (drilling machine) பயன்படுத்தி தாக்கியுள்ளார் கொடுமைக்கார வாத்தியார் ஒருவரி.
கான்பூர் பகுதியில் பிரேம் நகரில் செயல்படும் பிரைமரி ஸ்கூலுக்கு தனியார் பள்ளியில் இருந்து புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் தான் அனுஜ் பாண்டே. அவர் லைப்ரரியில் இருக்கும் போது அந்த வழியாக சென்ற 5 ஆம் வகுப்பு மாணவன் கையில் ட்ரில்லிங் மெஷின் இருப்பதை பார்த்த்தும் நிறுத்தியுள்ளார். பிறகு அந்த சிறுவனை இரண்டாம் வாய்ப்பாடு சொல்லும்படி கேட்டுள்ளார். ஆனால் சிறுவனுக்கு சரியாக தெரியாததால் கோபத்தில் அவன் கையில் இருக்கும் இயந்திரத்தை வாங்கி அந்த சிறுவனனின் இடது கையில் வைத்துள்ளார். இதனை பக்கத்தில் இருந்து பார்த்த கிருஷ்ணன் என்ற சிறுவன் பதறி போய் சுவிட்ச்சை ஆஃப் செய்து விட்டான்.
ஆனால் அதற்குள் அனுஜ் அவர்கள் அந்த இயந்திரத்தின் மூலம் என்னுடைய கையில் காயத்தை ஏற்படுத்திவிட்டார். இந்த சம்பவம் வியாழனன்று நடந்துள்ளது, ஆனால் இது குறித்து கல்வி நிர்வாகம் எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும் அந்த சிறுவனுக்கு முறையான சிகிச்சையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மறுநாள் அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்கூல் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தான் இந்த சம்பவம் வெளியே வந்தது. தகவல் அறிந்து வந்த அடிப்படை கல்வி அலுவலர் போராட்டக்காரர்களிடம் அந்த ஆசிரியரை வேலையை விட்டு நிரந்தரமாக வெளியேற்றவும், மூவர் கொண்டு குழு ஒன்றை உருவாக்கி இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரிக்கவும் உத்தரவிடுமாறு வாக்குறுதி அளித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…