மினிஸ்டரி ஆப் ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது. அந்த வீடியோவில் பெங்களூரு கே.ஆர்.ரயில் நிலைய மேடையில் காவலர்கள் நடந்து சென்றுகொண்டு உள்ளனர். அப்போது எதிரே தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. உடனே சமயோசிதமாக போலீசார் ஒருவர், பின்னால் திரும்பி ப்ளாட்பாஃர்ம் முழுக்க யாரும் இருக்கிறார்களா என்று பார்க்கிறார். அப்போது தண்டவாளத்தில் தவறி விழுந்து, மீண்டும் மேலே ஏறத் தெரியாமல் ஒருவர் தடுமாறுவதைப் பார்த்து அவரை நோக்கி ஓடுகிறார்.
பின்னர் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் விழுந்த அவரை மீட்கின்றனர். இதனையடுத்து அந்த பகுதியை ரயில் வேகமாக கடக்கிறது. பதைபதைக்க வைக்கும் அந்த காட்சி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காவலர்களை மக்கள் ரியல் லைஃப் ஹீரோஸ் என பாராட்டி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…