பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மக்களுக்கு ரூ.1,000 வழங்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 பொங்கலுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகுதிப்பில் கெட்டுப்போன பொருட்கள் இருந்ததாக சர்ச்சை வெடித்த நிலையில், இந்த முறை எந்தவொரு குறையும் இல்லாமல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
மேலும் இந்த முறை, ரூ.1,000 ரூபாயை பொங்கல் பரிசாக வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபையை கூட்டும் தேதி மற்றும் கவா்னர் உரையில் இடம் பெற வேண்டிய கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…