இயக்குனர் சசி இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ படத்தில் நடிகர் ஸ்ரீ காந்திற்கு அப்பாவாக தெரு நாடக கலைஞர் ராமு அறிமுகமானார். இதனையடு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டுக்களும் குவிந்தன. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு மேலும் சில திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில் 'வீதி நாடகக் கலைஞர் ராமுவுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தமிழ் நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…