தற்போது அனைத்து நாடுகளிலும் மின் தட்டுப்பாடு, விலை ஏற்றம் போன்ற நிலையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலை விளக்குகளின் நகரம், பேஷன் தலைநகரம், காதல் நகரம் என்று மக்களால் கருதப்படும் பாரிஸ் நாட்டில் சமீப காலமாக மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் முன்கூட்டியே அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தினமும் மக்கள் பார்த்து ரசிக்கும் ஈபிள் டவரின் மின்விளக்குகள் இரவு 1 மணி நேரம் வரை ஒளிரும். ஆனால் மின் தட்டுப்பாடு காரணமாக வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் இரவு 11.45 மணிக்கெல்லாம் மின்விளக்குகள் அணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…