கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல நாட்களாக பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு என்பது நிலவி வந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன, மேலும் பல்வேறு நிறுவனங்கள் உற்பத்திகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் மின் தட்டுப்பாடு வரும் என ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில், நிலக்கரி இருப்புக் குறைவாக உள்ளது. அதனால் வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
சென்டர் பார் ரிசர்ச் ஆன் எனர்ஜி அன்ட் கிளீன் ஏர் என்ற அமைப்பின் அறிக்கையின் படி நாடு முழுவதும் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களிலும் 2 .7 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி உள்ளது. அனல் மின் நிலையங்களுடன் இணைந்துள்ள நிலக்கரி சுரங்கங்களின் கிடங்குகளில் 1.35 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளது.
மேலும் அடுத்த மாதம் பருவ மழை தொடங்கியது நிலக்கரி வெட்டி எடுத்து கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படும் எனவே போதிய அளவில் நிலக்கரியை சேமித்துவைக்க வேண்டும் இல்லையென்றால் நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு பிரச்னையை சந்திக்கும் காலமாக ஜூலை -ஆகஸ்ட் மாதங்கள் இருக்கும் என மின் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…