Politic News : பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் திரெளபதி முர்மு இன்று தமிழகத்திற்க்கு வருகை தந்திருந்தார். மேலும் சென்னை வந்து அரசியல் கட்சிகளிடம் தனக்கு ஆதரவு திரட்டினார்.
இந்திவில், வரும் 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் திரெளபதி முர்மு என்பவரும் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா என்பவரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யஷ்வந்த் சின்கா சென்னை வருகை தந்திருந்தார். இதனையடுத்து, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டினார். இந்நிலையில், பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வந்தார்.
இதனையடுத்து, அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…