சென்னை: தக்காளி விலை அதிகரித்துள்ளதால் ரேஷனில் குறைந்த விலையில் தக்காளி வினியோகம் செய்வது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் கிலோ ரூ.10க்கு விற்பனையான தக்காளி கடந்த சில வாரங்களாக ஜெட் வேகத்தில் அதிகரித்தது. கிலோ ஒன்றுக்கு ரூ.140வரை விற்பனையான தக்காளியை இல்லத்தரசிகள் வாங்க முடியாமல் வேதனை அடைந்தனர். அதே சமயம் திட்டமிட்டு பதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திட்டமிட்டு விலையை ஏற்றுவதற்காக தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்த நிலையில் கிலோ ஓன்றுக்கு ரூ.20வரை குறைந்தது.
இதை தொடர்ந்து தக்காளி விலையை கட்டுபடுத்தும் நோக்கில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் மொத்த விலையில் கிலோ ரூ.100க்கும், சில்லறை விலையில் ரூ.130க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு நாளை அமைச்சர் பெரியகருப்பணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்படும் எனத் தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…