Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரதமர் வெளிநாட்டு பயணத்தால் பலனில்லை: கனிமொழி எம.பி குற்றச்சாட்டு

Baskarans Updated:
பிரதமர் வெளிநாட்டு பயணத்தால் பலனில்லை: கனிமொழி எம.பி குற்றச்சாட்டுRepresentative Image.

சென்னை: இந்தியாவில் ஜாதி, மத பிளவுகள் அதிகரித்துள்ளன நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்றும், அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி பேசியது போன்ற ஒரு நிலை நாட்டில் இல்லை என்றும் எம்பி கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை செம்மொழி பூங்காவில் புலம்பெயர்ந்தவர்களின் இரண்டு நாள் உணவு திருவிழா இன்று நண்பகல் துவங்கியது. எம்பி கனிமொழி உணவு திருவிழாவை திறந்து வைத்து, பலவகையான உணவு அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் கணவர் அரவிந்தன் மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களோடு அமர்ந்து,  இலங்கை அசைவ உணவு வகைகளை கனிமொழி ருசித்து உண்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் உணவு திருவிழா நடைபெறுகிறது என்றும், அவர்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கனிமொழி , அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்தியா ஜாதி மத பேதமற்ற நாடாக திகழ்கிறது என்று மோடி பேசியதில் உண்மை கிடையாது என்றும் இந்தியா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஜாதி, மத காழ்ப்புணர்வுகள் அதிகரித்திருக்கின்றன என்று குற்றம் சாற்றிய அவர், மோடியின் வெளிநாட்டு பயணத்தால் எவ்வித பலனும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்