ஆந்திரப்பிரதேசத்தில் மகாலட்சுமி என்ற பெண் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, தனியார் மருத்துவமனையில் 9 மாதங்களாக சிகிச்சை எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்ததால், அவர் ரம்யா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு தலைமை மருத்துவர் சிகிச்சை எடுத்த பார்த்தபோது அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதன் படி, டிசம்பர் மாதத்தில் சிகிச்சை தொடங்கப்பட்டு மருந்து, சிகிச்சைக்கான செலவு என 40,000 ரூபாய் செலவழித்துள்ளனர்.
ஆனால், பெண் கடைசியாக செப்டம்பர் 12 ஆம் தேதி ரம்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், செப்டம்பர் 22 ஆம் தேதி பிரசவத் தேதியாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்தப் பெண் கர்ப்பம் தரித்ததற்கு எந்த வித மாற்றமும் இல்லாமையால் அவரது தாயார் அவரை அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இல்லை என்ற உண்மையைக் கூறியுள்ளார்.
கருவுறாத பெண்ணிற்கு ஒன்பது மாதங்கள் சிகிச்சை எடுத்து, அந்தப் பெண்ணிற்கு பிரசவத் தேதியையும் வழங்கியிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…