Thiruvannamalai Latest News : திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க தடை விதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை கிரிவல பாதையை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க முயற்சி செய்வதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
கருணாநிதி சிலை
இந்த விசாரணையின்போது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை என்றும் கிரிவல பாதையை பயன்படுத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் கூறிய நீதிபதிகள் கருணாநிதி சிலை வைக்க தடை விதிக்க உத்தரவிட்டனர்.
ஆட்சியர் ஆய்வு
மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி இன்றைய நிலவரப்படி கருணாநிதி சிலை வைக்கப்பட இருக்கும் இடம் உண்மையிலேயே ஆக்கிரமிப்பில் உள்ளதா..? இல்லையா..?என்பது குறித்து மே 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…