தமிழகத்தில் மின் நுகர்வோர் எண்- ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என அனைத்து பயனர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்காக வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வேக வேகமாக ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில், மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் சில எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? எளிமையான வழிமுறைகள்..
அதாவது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், சிறப்பு முகாமுக்கு வரும் முதியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கணினியில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
காலை 10.30 மணி முதல் மாலை 05.15 மணி வரை இடைவெளியின்றி பணியாற்றவும் உத்தரவிடப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…