பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முதல்வர் பகவந்த் மானால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஊழல் தடுப்புப் பிரிவால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பஞ்சாபில் கடந்த மார்ச் மாதம் தான் ஆம் ஆத்மி பெருவெற்றி பெற்று பகவந்த் மான் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்நிலையில், அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற விஜய் சிங்லா மீது வெறும் இரண்டே மாதங்களில் ஊழல் குற்றச்சாட்டு வெளியானது.
தனது துறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் அனைத்திலும் ஒரு சதவீதத்தை கமிஷனாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக தெரிகிறது. இது குறித்த புகார் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு சென்ற நிலையில், குற்றச்சாட்டில் உண்மையிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்ய மான் முடிவு செய்தார். ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் எதிர்ப்பு அரசியல் மாடலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரை டிஸ்மிஸ் செய்ததோடு, அவரை கைது செய்து விசாரிக்கவும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் ஒருவரை ஆம் ஆத்மி அரசு பதவி நீக்கம் செய்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் வழக்கில் தனது அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…