பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தியது.
மரத்தில் சிக்கியிருந்த ட்ரோனை கண்டறிந்த பிஎஸ்எஃப் படையினர் இன்று (அக்டோபர் 14) அதிகாலை 4:30 மணியளவில் அதை சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. பிஎஸ்எஃப் பஞ்சாப் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் விவரங்களின்படி, பாகிஸ்தான் சமீபகாலமாக இந்தியாவில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களை வழங்குவதற்காக ட்ரோன்கள் மற்றும் பெரிய ஹெக்ஸாகாப்டர்கள் அல்லது குவாட் காப்டர்கள் மூலம் முயற்சிக்கின்றது.
ஒரு அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 9 மாதங்களில் பாகிஸ்தானில் இருந்து 192 பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன என்றும் அவற்றில் 8 சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…