தற்போது கோடைக் காலம் என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டோம், அதற்கு காரணம் வெப்பச்சலனம் காரணமாக பெய்து வரும் தொடர் மழையே ஆகும்! கனமழை பெய்து கொண்டு இருப்பது கோடையின் வெக்கைக்கு சுகமாக இருந்தாலும் சற்று போக்குவரத்து இடையூறாக இருப்பது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோவையில் 11 செண்டிமீட்டரும் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 1 செண்டிமீட்டரும் பெய்து வந்தது. இவ்வாறு மழை பெய்து கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே, இந்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 22.05.22 மற்றும் 23.05.22 தினங்களில் இடியுடன் கூடிய கன மழை இருக்கும் என்றும், அதன்பிறகு படிப்படியாக குறைந்து 25.05.22 மற்றும் 26.05.22 தினங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…