Rain Update : தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக அக்கினி வெயில் தொடங்கிய நிலையில் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைவாகவே காணப்பட்டது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் இருக்கும் எனவும் 29, 30 ஆம் தேதிகளில் லட்சத்தீவு, கேரளா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…