ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி வாரம் இருமுறை பால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகையை அதிகரிப்பதோடு, இந்த முயற்சி குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவையும் அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது.
முதல்வர் அசோக் கெலாட் பட்ஜெட்டில் அறிவித்தபடி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'முக்யமந்திரி பால் கோபால் யோஜனா' திட்டத்தின் கீழ் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பால் வழங்கப்படும்.
திட்டம் எங்கு செயல்படுத்தப்படும்?
'முக்யமந்திரி பால் கோபால் யோஜனா' அரசு பள்ளிகள், மதரஸாக்கள் மற்றும் மதிய உணவு திட்டத்துடன் தொடர்புடைய சிறப்பு பயிற்சி மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
62 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவார்கள்
முக்யமந்திரி பால் கோபால் யோஜனா திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (கல்வி) பவன் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்கள் விடுமுறை என்றால், அடுத்த கல்வி நாளில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 150 மில்லி பாலும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 200 மில்லி பாலும் வழங்கப்படும் என கூடுதல் தலைமைச் செயலாளர் (கல்வி) பவன் குமார் கோயல் மேலும் தெரிவித்தார்.
மேலும் ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பிடம் இருந்து இதற்கான பால் பெறப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…