Politics : பாலியல் குற்றவாளி உங்க ஆளு ராஜீவ்காந்தி என ஜோதிமணி கேள்விக்கு நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலலித்துள்ளார்.
தமிழகத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்படி, பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா, 400 கோடி பீரங்கி ஊழல் மற்றும் ஒரு ராணுவத்தை அனுப்பி என் இனத்தையே அழித்தார்” என கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸ் பதிலடி
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினரும் சீமானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என விமர்சித்தார்.
சீமான் பதிலடி
இதனையடுத்து, இன்று காலை தூத்துக்குடி சென்ற சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தூத்துக்குடி துப்பாக்கி சூடு மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது என கூறினார்.
மேலும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உங்களை பாலியல் குற்றவாளி என கூறீயது பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
பாலியல் குற்றவாளி
சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றது. அதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி பற்றி ஏன் ஜோதிமணி பேசவில்லை. இதனையடுத்து, நான் பாலியல் குற்றம் செய்ததை ஜோதிமணி பார்த்தாரா என கடுமையாக பதிலடி கொடுத்தார். மேலும், பாலியல் குற்றவாளி உங்க ஆளு ராஜீவ்காந்தி தான்” என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…