Politic News : கேபி முனுசாமி திமுகவின் கைக்கூலி என ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவருக்கும் இடையே ஒற்றை தலைமை சண்டை உச்சகட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான கேபி முனுசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.
இந்நிலையில் இன்று இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஓபிஎஸ் உடன் இவ்வளவு நாள் பயணம் செய்தது வேதனை தருகிறது என்றும் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது” என கூறியுள்ளார்.
மேலும் “ஜனநாயக கட்சி செயல்பாடுகள் இருக்கும் என்று கூறிய ஓபிஎஸ் கொடநாடு விவகாரத்தில் தனது மகனையே அம்பாக பேச வைக்கிறார்” எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேசியபோது, “கேபி முனுசாமி திமுகவின் கைக்கூலி என்றும் திமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர்” எனவும் கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்து அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…