Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னை மிரட்ட நினைத்தால் பல உண்மை வெளிவரும்..! – ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை..!

Muthu Kumar July 16, 2022 & 16:30 [IST]
என்னை மிரட்ட நினைத்தால் பல உண்மை வெளிவரும்..! – ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை..!Representative Image.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை ஓபிஎஸ் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை என்ற தீர்மானத்திற்கு எதிராக  ஓ.பன்னீர்செல்வம்தனது ஆதரவாளர்களுடன் எதிர்ப்பை காட்டி வருகிறார். 

இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தன்னை மிரட்டுவதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும், இதுகுறித்து பேசியுள்ள அவர், “ஓ.பன்னீர்செல்வம் என்னை சீண்டி பார்க்க வேண்டாம். கோவை செல்வராஜ் போன்ற அதிமுக வரலாறு தெரியாதவர்களை கொண்டு ஓபிஎஸ் என்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின்விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும்” என கூறியுள்ளார்.

மேலும், என்னை மிரட்டி பார்த்தால் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட வேண்டி வரும். பிறகு அவர் வெளியே தலை காட்டவே முடியாது” என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்