அதிமுகவில் இருந்து இபிஎஸ் உள்ளிட்ட சிலரை நீக்குவதாக பன்னீர் செல்வம் கூறியது காமெடியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பில், “கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறையை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதால் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று இபிஎஸ் உள்ளிட்ட 44 பேரை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். “அதிமுகவில் இருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமிக்குத்தான் உள்ளது. எங்களைக் கட்சியை விட்டு பன்னீர்செல்வம் நீக்கியதை காமெடியாகப் பார்க்கிறென். அவர் மற்ற கட்சியில் இணையலாம்” எனத் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…