கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணத்திற்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைசையை ஏற்ப்படுத்தியுள்ளது.
2K Kids-களின் உலகமே தனி தான்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் யூடியூபர் டிடிஎப்- க்கு ஆதரவாக ஏராளமான சிறுவர்கள் திரண்டு வந்தது, பெரும் பேசு பொருளாக மாறியது.சில யூடியூபர்கள் சிறுவர்களிடையே நஞ்சை விதைப்பதாகவும், குறிப்பாக டிடிஎப் வாசன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இது போன்று அவரை பின்பற்றுபவர்களும் செய்யக்கூடும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக சென்று அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள டிடிஎப் வாசனை கைது செய்யக்கோரி, சென்னை காவல்துறையை டேக் செய்து வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை காவல்துறையும், நோட் செய்து வைத்துக்கொள்வதாக தெரிவித்தது. இதனை மறுடுவிட் செய்து பதிவிட்ட 90s Kids பெயர் கொண்ட ஒருவர், வெற்றி, வெற்றி.. அடுத்து காத்து கருப்பு கலை கார் வாங்கிட்டானாம் வாங்க அவன என்னனு பாப்போம் என பதிவிட்டிருந்தார். இது போன்று தான் பப்ஜி மதனையும் 90ஸ் கிட்ஸ்களின் சூழ்ச்சியால் சிறையில் உள்ளதாக 2K Kidsகள் புலம்புவது போன்று சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருந்தது.
இப்படி ஒரு பக்கம்2K Kidsகள் கண்ணீர் கதை என்றால், 90s Kidsகளின் கதையோ வேறு.. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், "பாலவிளையில் ஓர் சந்திப்பு.. குறிப்பாக 4, 5 நபர்களுக்கு மட்டும்.. ஊரில் வரும் திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு.. தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும். குறிப்பு- சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…