சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டடதால், மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அவர், மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். மேலும் அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் நிர்வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமியிடமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் ஆளுநர் அதை நிராகரித்தார். இந்நிலையில் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழக அமச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கி உத்தரவிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…