சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இனிமேல் பேச்சுக்கே இடமில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பண்ரூட்டி ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, பண்ரூட்டி ராமசந்திரன், ஓ.பன்னீர்செல்வோம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இனிமேல் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்து விட்டனர்.
இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு அளிக்கிறேன். கொங்குமண்டல மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…