திருச்சியில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு முடிந்துவிட்டது, அப்போது இருந்து தற்போது வரை சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அமர வைக்க வேண்டும் என கட்சியினர் கூறிவருகின்றனர். மேலும் இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரடியாக கட்சியினர், மற்றும் அமைச்சர்கள் பேசி வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் திருச்சியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது கட்சினர் இவரது தலைமையில் உதயநிதி ஸ்டானிலை அமைச்சராக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…