தமிழக முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உள்ள 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று புதன் கிழமை கடைசி நாள் எனவும், மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…