Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரணில் அதிபராக காரணம் இந்தியாவா..? பரபரப்பு தகவல்.. இந்தியா விளக்கம்!!

Sekar July 20, 2022 & 14:57 [IST]
ரணில் அதிபராக காரணம் இந்தியாவா..? பரபரப்பு தகவல்.. இந்தியா விளக்கம்!!Representative Image.

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரை தேர்வு செய்ததின் பின்னணியில் இந்தியா இருப்பதாக வெளியான ஊடக தகவல்கள் அனைத்தும் பொய் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபரானார்.

இந்நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு இன்று நடந்த தேர்தலில் டலஸ் அழகம்பெருமவை வீழ்த்தி ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக தேர்வாகியுள்ளார். பாராளுமன்றத்தில் வெறும் ஒரு எம்பியை மட்டுமே வைத்துள்ள ரணில் விக்ரமசிங்கே எப்படி இலங்கை அதிபராக பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இதன் பின்னணியில் இந்தியாவின் அரசியல் தலையீடு இருப்பதாகவும், பெரும்பான்மை வாக்குகளுடன் ரணில் வெற்றி பெற இந்தியா தேவையான உதவிகளை வழங்கியதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை மறுத்துள்ளது. மற்றொரு நாட்டின் ஜனநாயக நடவடிக்கைகளில் இந்தியா தலையிடுவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்