ரஷியாவும் உக்ரைனும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த இரண்டு நாட்டையும் சேர்ந்த காதலர்கள் தற்போது இந்திய முறைப்படி திருமணம் செய்துள்ளது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
உக்ரைனில் குடியேறிய ரஷ்யரான செர்ஜி நோவிகோவ் (Sergei Novikov) மற்றும் உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த எலோனா பிரமோகா (Elona Bramoka) இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்வதில் மிகவும் உறுதியாக இருந்துள்ளனர், இந்நிலையில் போர் தொடங்குவதற்கு முன்னரே இருவரும் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வந்து தங்கியிருந்துள்ளனர்.
திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த போது எங்கு எப்படி திருமணம் செய்துக்கொள்வது? என தயங்கியவர்களுக்கு அறிமுகமானது திவ்யா ஆசிரமம். ஆசிரமத்தை தொடர்புகொண்டு தங்கள் திருமண விருப்பத்தைத் தெரிவித்த போது, ஆசிரமம் இருவரையும் வரவேற்றுள்ளது.மேலும், உள்ளூர் மக்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் உள்ளூர்வாசிகள் அனைத்து சடங்குகளையும் செய்து, பாரம்பரிய ஹிமாச்சலி நாட்டுப்புற இசைக்கு நடனமாடி, புதுமணத் தம்பதிகளுக்கும், விருந்தினர்களுக்கு காங்கிரி தாம் உணவு வகைகளை ஏற்பாடும் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் இந்திய பாரம்பரிய திருமண உடை அணிந்து திருமணம் செய்தனர், மேலும் திருமணத்தின் போது கூறும் அமத்திரங்கள் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் மொழிபெயர்த்து கூறப்பட்டது. அதே நேரம், தரம்கோட்டில் வசிக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டு சடங்குகளைச் செய்து மகிழ்ந்தனர்" எனத் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…