விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையை கண்டித்து சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில்,
விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பிண்மை ஆகிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிடுவதால் மக்களவை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (EDshahi Band karo) அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை நிறுத்து என்ற முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையை கண்டித்து சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…