தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக கருத்து பதிவிட்ட பாஜக தலைவரை அவரது ஆதரவாளர்கள் அவரது அலுவலகத்திற்கே சென்று கண்ணத்தில் பளார் பளார் என அறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக பாஜக செய்தி தொடர்பாளர் விநாயக் அம்பேத்கர் என்பவர் இணையத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த கருத்து சரத்பவார் ஆதரவாளர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த சரத் பவாரின் ஆதரவாளர்கள் விநாயக் அம்பேத்கரின் அலுவலகத்துக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டதுமட்டுமில்லாமல் சரத்பவார் ஆதரவாளர்களில் ஒருவர் பாஜக செய்தி தொடர்பாளர் விநாயக் அம்பேத்கரை கண்ணத்தில் பளார் என அறைந்துள்ளார். இதன் வீடியோ காட்சிகளை மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து சரத் பவாருக்கு எதிராக இணையத்தில் கருத்து பதிவிடுபர்களை போலீசார் கைது செய்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சரத் பவார் ஊழல்வாதி என சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்ட மராத்தி நடிகை இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…