திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை. ஒரு கட்சியின் இயக்கத்தின் தலைவர் என்றால் தொண்டர்களால் முடிவு செய்து ஏற்றுக்கொள்கிற ஒரு தலைவராக இருந்தால்தான், அந்த தலைமையின் கீழ் எல்லோரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். தற்போது அந்த மாதிரி நிலைமை அங்கே இல்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த மாதிரி நிகழ்வுகள்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் திமுக அரசின் ஆட்சி குறித்து கேட்டதிற்கு ஒரு ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. கேட்டால் 560 திட்டங்கள் செய்துவிட்டதாக சொல்கிறீர்கள். நீங்கள் வருஷம் முழுவதும் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், உங்களுடைய திட்டங்களை எப்படி செயல்படுத்துவீர்கள்?. நீங்கள் பெரியவர்களா நாங்கள் பெரியவர்களா என்று நினைப்பதை விட்டுவிடவேண்டும். என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…