நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இன்று ஜாமீனில் விடுதலையானார்.
முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, சவுக்கு சங்கர் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கர் தன் மீதான உயர்நீதிமன்ற வழக்கு குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தர பிறப்பித்தது. இதனால் அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 வழக்குகளின் கீழ் தமிழக போலீஸ் அவரை கைது செய்தது.
இந்நிலையில், இந்த 4 வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இதையடுத்து அவர் இன்று சிறையிலிருந்து வழியே வந்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…