ஒவ்வொரு ஆண்டும் வரும் பிப்ரவரி மாதத்திற்கென காத்திருப்பவர்கள் ஏராளம். பிப்ரவரி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது காதலர் தினமே. ஒரு நாள் என்றில்லாமல் ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த காதலர் வாரம் அனைவருக்குமே மிகச் சிறப்பான வாரம் ஆகும். இந்த தினத்தில் தங்களது ஆசைகளை அன்பிற்குரியவர்கள் மீது காட்டும் தருணம் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறப்புத் தருணம் ஆகும். இத்தகைய மறக்க முடியாத தருணத்தைப் போற்றும் வகையில், காதலர்களுக்குக் கொடுக்க வேண்டிய காதல் கவிதைகள் சிலவற்றை இதில் காணலாம்.
வானில் இருந்து வந்த தேவதையோ
நீ என நான் வியந்த வேளையிலே
உன்னை கண்ட என் கண்களோ மூடவில்லை.
என் இதயமோ துடிக்கவில்லை.
உயிரற்ற உடலாய் நின்ற என்னை
உன் பார்வை எனும் மின்னலால்
நீ தூக்கி அடித்தது ஏனோ..!
நீ வருவாய் என..!
நீ என்னை விட்டு நீங்கிய நாள் முதல்
நீ என்றாவது வருவாயா என துடித்து கொண்டிருக்கிறோம்
உன் நினைவோடு நானும் வலியோடு என் இதயமும்..!
உன் நினைவு என்ற கடலில் வாழ்க்கை என்னும் படகில் உன் எண்ணங்கள் என்னும் அலைகளில் சிக்கிய நான் உன் அன்பு என்ற கரையை தேடி அலைகின்றேன்..!
கண் இல்லாத ஓவியனைப் போல உயிர் இல்லாத உடலைப் போல வண்ணம் இல்லாத வானவில் போல கரை இல்லாத கடலைப் போல அமைதி இல்லா என் மனம் உன்னைத் தேடி அலகிறது என் உயிர் பிர்யும் வரை அதன் தேடலும் முடியாது.
உன் நினைவும் நீங்காது..!
கடல் அலைகள் நம் காலில் முத்தமிட உன் மூச்சு காற்று என் மீது படற
என்னையே நான் மறந்து உன்னில் கலந்து உன்மடியில் சாய்ந்து நம்மை மறந்து நாம் பேசி சிரித்த
அந்த மாலை பொழுதுகளின் நினைவில் நீ இல்லாமல் தான் மட்டும் ஒளி இல்லாத மதியாய் மறைந்து கொண்டிருக்கிறேன்..!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…