2002 குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேரை குற்றமற்றவர்கள் என சிறப்பு புலனாய்வு அமைப்பு க்ளீன் சிட் வழங்கியதை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஜாகியா ஜாஃப்ரியின் மேல்முறையீடு தகுதியற்றது மற்றும் தள்ளுபடி செய்யப்படத் தகுதியானது என்று கூறி, குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிரான ஜாஃப்ரியின் எதிர்ப்பு மனுவை நிராகரித்து, சிறப்பு பெருநகர மாஜிஸ்திரேட்டின் உத்தரவை நீதிபதி ஏ எம் கன்வில்கர் தலைமையிலான பெஞ்ச் உறுதி செய்தது. ஜாகியா ஜாப்ஃரி கொல்லப்பட்ட எம்பி எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியாவார்.
பிப்ரவரி 28, 2002 அன்று அகமதாபாத்தில் உள்ள குல்பெர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட 68 பேரில் எஹ்சான் ஜாஃப்ரியும் அடங்குவார், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ராவில் எரிக்கப்பட்டு 59 பேரைக் கொன்றதையடுத்து குஜராத்தில் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…