தமிழகத்தில், வட கிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால், இன்றும் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் வட்டம், மாங்காடு உள்பட்ட பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து மழைநீர் தேங்கியுள்ளதா, 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன் படி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நன்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…