விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளன. இது குறித்த விசாரணையில் இரண்டு தனியார் பள்ளி வாகனங்கள் போட்டி போட்டு ஒட்டி சென்றபோது ஒரு வாகனம் மீது மற்றொன்று மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போட்டி போட்டு பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கோபாலபுரம் கிராம மக்கள் மறியலால் விருத்தாசலம் – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…