Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sri Lanka : இலங்கையில் பள்ளிகள் மூடல்..? காரணம் என்ன..?

Muthu Kumar June 20, 2022 & 09:30 [IST]
Sri Lanka : இலங்கையில் பள்ளிகள் மூடல்..? காரணம் என்ன..?Representative Image.

Sri Lanka : இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இந்நிலையில் இலங்கை முழுவதும் அரசு அலுவலகங்களை இன்று முதல் மூட அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்